வகுப்பறைக் கற்பித்தல் முறைகள்

உதயகுமார் PSN COLLEGE OF EDUCATION TIRUNELVELI.....
சாதாரணமாக வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடும் போது ஒரு பாட அலகை கற்பிப்பதற்கு மிகச் சிறந்த கற்பித்தல் முறை எதுவென யாரும் சிபார்சு செய்யமுடியாது. ஆசிரியரே படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார். கற்பித்தல் ஓரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். மிகச் சிறந்த கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளல் ஆசிரியரின் கடமையாகும்.
பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின் இயல்பு, பாடஅலகின் தன்மை, பௌதிக சூழலின் தன்மை, பெற்றுக்கொள்ளக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் அகிய அனைத்து சாதனங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாடஅலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்க்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும். அந்தவகையில் கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
1.விரிவுரை முறை கற்பித்தல்
2.குழுமுறைக் கற்பித்தல்
3.வினாவிடை முறைக்கற்பித்தல்
4.கூட்டுமுறைக்கற்பித்தல் - பல்தரக்கற்பித்தல்
5.ஒப்படைமுறைக் கற்பித்தல்
6.கண்டறிமுறைக் கற்பித்தல்
7.படிமுறைக்கற்பித்தல்
8.சிந்தனைக்கிளறல் கற்பித்தல் முறை
9.விளையாட்டு முறைக்கற்பித்தல்
10.பாத்திரமேற்று நடித்தல்
11.நுண்முறைக்கற்பித்தல்
12.போலச்செய்தல் கற்பித்தல் முறை
13.வெளிக்களச் செயற்பாட்டு கற்பித்தல் முறை
14.முன்வைத்தல் முறை
15.வணிக முறை கற்பித்தல்
16.பிரச்சினை திர்த்தல் முறை
17.செய்திட்ட கற்பித்த்ல் முறை
என பல வகை கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான இடத்தில் வகுப்பறை கற்பித்தலில் சரியான முறையை தெரிவு செய்யும் போது கற்றல், கற்பித்தல் சிறப்பாக அமையும்.
1.விரிவுரை முறை கற்பித்தல்- இது பழமையான கற்பித்தல் முறையாகும். ஆசிரியரை முதன்மையாக் கொண்டது. ஆசிரியர் பேச்சு மூலமாக வழங்கும் அம்சங்களை மாணவர் காது கொடுப்பர். சில வேளை குறிப்பெடுத்துக்கொள்வர். எனினும் மாணவரின் பிரதிபலிப்பு ஆசிரியரை சென்றடைவதில்லை. பின்னூட்டல் கிடையாது. கருத்து ஒரே திசைக்கு மட்மே செலுத்தப்படுகிறது. இங்கு மாணவர் தொழிற்பாடு கிடையாது. மாணவர்கள் சுறுசுறுசுப்பு காணப்படமாட்டாது. ஆர்வமற்ற செமிமடுப்போராக காணப்படுவர்.
2.குழுமுறைக் கற்பித்தல் -இங்கு சமவயதுக் குழுக்கள் காணப்படுவர். மாணவர் மையமே அடிப்படையாக் கொண்டது. மாணவர் உற்சாகமாக செயற்படவர். கண்டாய்ந்தவற்றைக் குழுக்களாக முன்வைப்பர். இங்கு குழுவின் தலைவர் தானாகவே உருவாகுவார். ஆசிரியர் மாணவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குறித்தக் கொண்டு சகல குழுக்கழும் முன்வைத்தலின் பின்னர் ஆசிரியரினால் கருத்துக்களும் வெளிக்கொணரப்டும். பின்னர் கணிப்பீடு, மதிப்பீடு இடம் பெறும். எனவே இங்கு வகுப்பறைக் கற்பித்தல் மிகவும் குதூகலமாகவும் சந்தோசமாகவும் காணப்படும். இங்கு 5E –( METHOD) முறை பயன்படுத்தப்படும். முற்றிலும் மாணவர் மையக்கற்பித்தல் மையமாக அமையும்.
3.வினாவிடை முறைகற்பித்தல்- இம் முறை மிகவும் பழமையான கற்பித்தல் முறையாகும். நவின காலத்தல் வினா எழுப்பல் முறை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுகிறது.
4.கூட்டுமுறைக் கற்பித்தல் - பல்தரக்கற்பித்தல் – பல ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தீர்க்கமான ஒரு நோக்கத்துடன் திட்டமிட்டு மாணவர் குழுவுக்கு கற்பிக்கும் ஒரு முறையாகும்.
5. பிரச்சினை தீர்த்தல் முறை – பிரச்சினை தீர்த்தல் கற்பித்தல் முறை ஒரு விஞ்ஞான முறையாகும். யோன்டுயி எடுத்துக்காட்டிய பிரச்சினை தீர்க்கும் முறை ஐந்து சந்தர்பங்களைக் கொண்டது. இங்கு மாணவர் பிரச்சினையை எழுப்புதலும், அப்பிரச்சினையை பகுப்பாய்வு செய்தலும் அது தொடர்பான ஏதும் அனுமானங்களை எழுப்புதலும், அந்த அனுமானங்களை பரிசீலனை செய்து பார்த்தலும், ஆதாரஙகளின் அடிப்படையில் தீர்மானத்துக்கு வருதலும் ஆகும்.
6.விளையாட்டுமுறை-.பாத்திரம்மேற்றுநடித்தல் – மாணவர்கள் செயற்பாட்டு அனுபவம் திருப்தி பெறுகின்ற கற்பித்தல் முறையாகும். பாத்திரமேற்று நடித்தலின் போது ஓர் உயிர்துடிப்புள்ள பாத்திரத்தை அல்லது சந்தர்பத்தை மாணவர்களால் நடித்துக் காட்டலாகும். எனவே மாணவர் மிகவும் விருப்பத்தோடு செயற்படுவதற்கு இந்த நுட்ப முறை நான்கு உதவுகிறது. விளையாட்டு - பாத்திரமேற்றல்-நாடகம், நாட்டியம்; வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்கள் மகிழ்ச்சி. சுறுசுறுப்பு பாடத்தில் விருப்பு ,என்பனவற்றிற்கு மிகவும் உதவுகிறது.
7.சிந்தனைக்கிளறல் கற்பித்தல் முறை – சிந்தனைகளைத் தூண்டல் என்பது பங்குபற்றுகின்றவர்கள் சுதந்திரமாக கருத்து வெளியிடக்கூடிய மகிழ்ச்சி மிக்க கற்பித்தல் முறையாகும். இம்முறையின் பண்புகளாக 1.வகுப்பில் சகலரும் பிரச்சினையைச் சமர்பித்தல் 
2.மாணவர்கள் சகலரும் கருத்து வெளியிடுவதற்கு இடமளித்தல்.
3.விடையை பின்னர் மதிப்பீடு செய்தலாகும். சிந்தனைதூண்டல் சுதந்திர வெளிப்பாட்டிற்கு ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் உதவும்.
8.நுண்முறைக்கற்பித்தல் - நுண்ணிய கற்பித்தலில் குறுகிய கால எல்லைக்குள் சிறு குழுவை பயன்படுத்தி ஆசிரியர் ஆற்றலை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தலாகும். பொதுவாக வகுப்பறையில் காணக்கூடிய கஸ்டமான நிலமையை நீக்கி கட்டுப்படுத்தப்பட்ட சந்தர்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆசிரியர் ஆற்றலை விருத்தி செய்வதே இதன் நோக்கமாகம்.

Comments